குடிவரவு மற்றும்‌ குடியகல்வுத்‌ திணைக்களத்தில்‌ புதிய வீசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல்‌ மற்றும்‌ புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும்‌ பணியை 2024.04.17 ஆம்‌ திகதி முதல்‌ ஆரம்பிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும்‌ தயார்படுத்தப்பட்டுள்ளன.

புதிய வீசா நடைமுறை, அதற்கான கட்டணங்கள்‌, பூர்த்தி செய்யவேண்டிய தேவைப்பாடுகள்‌ மற்றும்‌ இலங்கையில்‌ தங்கியிருக்க முடியுமான காலப்‌ பிரிவு என்பன இலக்கம்‌ 2360/24 மற்றும்‌ 2023. 1.27 ஆம்‌ திகதிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்‌ மூலம்‌ வெளியிடப்பட்டுள்ளது. (ஏற்புடைய வர்த்தமானி அறிவித்தலை www.documents.gov.lk இணையத்திலிருந்து தரவிறக்கம்‌ செய்துகொள்ள முடியும்‌.) ஏற்புடைய வீசா வகை இத்துடன்‌ இணைப்பாக சமர்ப்பிக்கப்படுகின்றது. (இணைப்பு !)

தற்போது நடைமுறையிலுள்ள ET A (Electronic Travel Authorization முறைக்குப்‌ பதிலாக அறிமுகம்‌ செய்யப்படும்‌ இணைய வழிமுறையான E-Visa முறைமை GBS Technology Service & IVS Global நிறுவனத்துடன்‌ இணைந்து செயற்படுத்துவதற்கான. ஒழுங்குகள்‌ செய்யப்பட்டுள்ளதோடு அந்த இணையத்தளத்தின்‌ தொடர்பு கீழே தரப்பட்டுள்ளது www.srilankaevisa.lk.

இது தொடர்பில்‌ பொதுமக்களை அறிவூட்டும்‌ பொருட்டு அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும்‌ அறிவிக்குமாறு தயவுடன்‌ வேண்டிக்கொள்கின்றேன்‌. மேற்படி இணைய வழிமுறையில்‌ வீசாவுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்‌ நடைமுறையை அறிமுகம்‌ செய்வதனூடாக விரைவான மற்றும்‌ வினைத்திறன்மிக்க வகையில்‌ வீசாவுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்‌ மற்றும்வீசாவைப்‌ பெற்றுக்கொள்வதற்கு வசதியளிப்பதன்‌ மூலம்‌ வெளிநாட்டு சுற்றுலாப்‌ பயணிகளின்‌ மற்றும்‌ முதலீட்டாளர்களின்‌ கவர்ச்சியைப்‌ பெற்றுக்கொள்ளல்‌. அத்தோடு, அன்னியச்‌ செலாவணி முதலீடுகளை அதிகரித்துக்கொள்வதன்‌ மூலம்‌ இலங்கையின்‌ பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்புச்‌ செய்தல்‌ குடிவரவு மற்றும்‌ குடியகல்வுத்‌ திணைக்களத்தின்‌ எதிர்பார்ப்பாகும்‌.

Annex_I_Tamil

ඊ-මේල් මගින් පිලිතුරු දෙන්න එය පිට

කරුණාකර ඔබගේ අදහස් ඇතුළත් කරන්න.
කරුණාකර ඔබගේ නම ඇතුලත් කරන්න