சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான கொரிய தூதுவர் திருமதி மியோன் லீ (Miyon Lee) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சமீபத்தில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது நாட்டின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிக்கு கொரிய அரசாங்கத்தின் ஆதரவு மற்றும் பங்களிப்புகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் மிக நெருங்கிய நட்பான கொரிய அரசாங்கம் நாட்டில் உள்ள திட்டங்களுக்கு பெரும் ஆதரவை வழங்கியுள்ளது மற்றும் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு அமைப்புகளான KOICA மற்றும் KOFIH மூலம் நாட்டின் சுகாதாரத் துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளது என்பதை அமைச்சர் இந்த நேரத்தில் நினைவு கூர்ந்தார்.
கொரிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் பங்களிப்புகளை கையாள்வது மிகவும் எளிதானது மற்றும் திறமையானது என்றும் நாட்டின் சுகாதாரத் துறை உற்பத்திகளை அதிகரிக்க முடியும் முடியும் என்றும் எதிர்காலத்தில் முன்மொழியப்பட்ட திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
தற்போது தேவைப்படும் மருத்துவ உபகரணங்களைப் பெறுவதில் கொரிய அரசாங்கத்திடமிருந்து இலங்கை ஆதரவை எதிர்பார்க்கிறது என்றும் நாட்டின் சுகாதாரத் துறையில் உள்ள ஒரு குறைபாடான மருந்து தர கண்காணிப்பு ஆய்வகத்தை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அமைச்சர் நினைவு கூர்ந்தார்.
நாட்டின் ஊடகத் துறையின் வளர்ச்சிக்கு கொரிய அரசாங்கத்திடம் தொழில்நுட்ப ஆதரவையும் அமைச்சர் நாடினார்.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சரின் வேண்டுகோளுக்கு சாதகமாக பதிலளித்த இலங்கைக்கான கொரிய தூதுவர் மியோன் லீ (Miyon Lee) நாட்டின் சுகாதாரத் துறைக்கு கொரிய அரசாங்கம் எதிர்காலத்தில் பங்களிப்பு வழங்கும் என தெரிவித்தார்.
கொரிய அரசாங்கத்தின் KOFIH இன் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்ட இலங்கையின் மருத்துவ பொறியியல் சேவைகளை மேம்படுத்தும் திட்டம் உட்பட சுகாதாரத் துறையில் தற்போது நடைபெற்று வரும் திட்டங்கள் குறித்து அவர் அமைச்சருக்கு விளக்கினார்.
KOICA பல்வேறு துறைகளில் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு உதவி வழங்குகிறது அதே நேரத்தில் KOFIH என்பது சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும்.
கடந்த ஆண்டில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கொரிய சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் நாட்டிற்கு வருகை தரும் போது விசா கட்டணம் இருப்பதால் கொரிய சுற்றுலாப் பயணிகள் சில நேரங்களில் பிற நாடுகளுக்குச் செல்வதாகவும் தூதர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை மிகவும் அழகான நாடு என்பதை நினைவு கூர்ந்த அவர் கொரிய சுற்றுலாப் பயணிகள் கண்டியில் உள்ள பல கோயில்கள் மற்றும் சிகிரியா போன்ற இடங்களைப் பார்வையிடுவதை மிகவும் விரும்புவதாகக் கூறினார்
இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்துரையாடி பிரச்சினைக்கு உடனடி தீர்வை வழங்குவதாகக் கூறினார்.
நாட்டின் ஊடகத் துறையின் முன்னேற்றத்திற்காக முன்மொழியப்பட்ட திட்டங்களுக்குத் தேவையான ஆதரவு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் நிபுணர் டாக்டர் அனில் ஜாசிங்கே மற்றும் கொரிய தூதரகத்தின் துணைத் தலைவர் திருமதி சோங்யீ ஜங் (Sohngyee Jung) ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

